Saturday, July 3, 2010

யூத நாட்டை இஸ்ராயில் எனப் பெயர் சூட்டி அழைப்பது சம்பந்தமாக

கேள்வி:
தீமை நிறைந்த நிராகரிக்கும் யூத நாட்டை'இஸ்ராயில்' என்று சொல்வதும் இந்த பெயரை வைத்து அந்த நாட்டை தரம் தாழ்த்தி பலி சொல்வதும் ஆகுமானதா ?

பதில்:
இது ஆகுமானது இல்லை என்பதுதான் சரியானது. யூதர்கள் ஒரு பெரிய சதியை செய்துள்ளார்கள். முஸ்லிம்களின் இடங்களில் அவர்களுக்கு (நமது நபியின் பெயரான) இஸ்ராயில் என்ற பெயரில் நாடு அமைக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்று எண்ணம் கொண்டுள்ளார்கள். இந்த சதியில் முஸ்லிம்களும் வீழ்ந்துள்ளார்கள். 'இஸ்ராயீல்' என்ற வார்த்தையை முஸ்லிம்கள் எழுத்துகளிலும் பேச்சுக்களிலும் உபயோகிக்கிறார்கள். இது மட்டுமில்லாமல் 'இஸ்ராயில்' என்ற வார்த்தையை தரம்தாழ்த்தி சாபமிடக்கூடச் செய்கிறார்கள்..

அல்லாஹ் தன் குர்ஆனில் யூதர்களை சபித்துள்ளான். 'அல் யஹூத்' என்றும், 'பனி இஸ்ராயிலில் நிராகரித்தவர்' என்றும்தான் அவர்களை சபிக்கிறான். 'இஸ்ராயில்' என்று உத்தம நபி யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பெயரில் அவர்களை கேவலப்படுத்தவில்லை. யூதர்களுக்கும் நபிமார்களான யாக்கூப் மற்றும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆகியோருக்கும் எந்த மார்க்க உறவும் இல்லை. அந்த நபிமார்களின் மார்க்கத்தின் உரிமை ஈமான் கொண்டவர்களான நம் முஸ்லிம் சமுதயாத்திற்க்குத்தான் உள்ளது.

நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். (அல் குர்'ஆன் 3:68) 

ஷைக் ரபீய் பின் ஹாதி அல் மத்கலீ 
Check with Article ID: CAF030001

குறிப்பு :
அல்லாஹ்வின் சாபத்துக்குள்ளான இந்த தீமையான நாட்டுக்கு 'இஸ்ராயில்' என்ற புனித நபியின் பெயரைச் சூட்டி அழைப்பது மட்டுமல்லாமல் 'பயங்கரவாதி இஸ்ராயில்', 'தீமையான இஸ்ராயில்', 'மனித விரோதி இஸ்ராயில்' என்று நமது நபியை மறைமுகமாக நாமே தரம் தாழ்த்துவது தவறாகும். யாக்கூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்று உயிரோடு இருந்தால் இப்படிச் சொல்வதை அவர்கள் விரும்புவார்களா என்று நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இப்படிச் சொல்வது அல்லாஹ்விற்கு விருப்பமானதாக இருக்குமா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கும் அவனுடைய பொறுத்தத்திற்கும் தகுதியான விதத்தில் வாழ அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன்.

ஆக்கம்: மஸூத் பின் அஹமத்

No comments:

Post a Comment