Saturday, June 26, 2010

குர் ஆனையும் சுன்னாவையும் தன்னுடைய தர்க்க வாதப்போக்கின் மூலம் பீ.ஜே வியாக்கியானம் செய்வதற்கு ஓர் உதாரனம்

பீ ஜேயின் விளக்கம்:

ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது ஆயிஷா (ரலி) அவர்களின் வயது ஆறு என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு ஆறு வயது சிறுமியை நாம் திருமணம் செய்யலாம் என்று முடிவெடுக்க முடியாது. 

இதைப் புரிந்து கொள்ள இஸ்லாமிய மார்க்கத்தின் சில அடிப்படை உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் இறைவனால் நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். முஸ்லிமல்லாத மக்களும் இவ்வுண்மையை அறிந்து வைத்துள்ளனர். 
இறைவனால் கடமையாக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் யாவும் ஒரே நேரத்தில் முழுமையாக நபிகள் நாயகத்திற்கு வழங்கப்பட்டதா? என்றால் அவ்வாறு வழங்கப்படவில்லை. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நாற்பதாவது வயதில் இறைவனிடத்தில் செய்திகள் வரத் துவங்கி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை 23 வருடங்கள் சிறிது, சிறிதாக இச்சட்டங்கள் அருளப்பட்டன. 
இச்சட்டங்கள் அருளப்படுவதற்கு முன்னால் அந்தச் சமுதாயத்தில் நிலவிய வழக்கப்படியே நடந்துக் கொண்டார்கள். அக்காவையும் தங்கையையும் ஒரே நேரத்தில் மணந்து கொள்ளும் வழக்கம் அன்றைய சமுதாயத்தில் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் முஸ்லிம்களில் சிலர் இவ்வழக்கத்தின் படியே மணந்துக் கொண்டனர். இவ்வாறு செய்யக் கூடாது என்று தடை வரும் வரை இந்த நிலை நிலவியது. 

ஆரம்ப காலத்தில் போதை பொருட்கள் தடுக்கப்படாமல் இருந்தது. இஸ்லாத்தை ஏற்ற பின்பும் ஏற்கனவே போதை பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தை தொடர்ந்தார்கள். போதை பொருள் தடை செய்யப்படும் வரை இதே நிலை நிலவியது. இது போல திருமணத்தின் ஒழுங்குகளும் விதிமுறைகளும் இறைவனால் வகுக்கப்படுவதற்கு முன் அன்றைய அரபுச் சமுதாயம் சிறுமிகளைத் திருமணம் செய்தது போலவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் திருமணம் செய்தார்கள். இவ்வாறு செய்யக் கூடாது என்று சட்டம் வரும் வருவதற்கு முன்னர் பலரும் இவ்வாறு செய்து வந்தனர். 

இதன் பின்னர் சிறுமிகளை திருமணம் செய்யக் கூடாது என்ற சட்டம் வந்தது. இவ்வாறு சட்டம் வந்த பின் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வது அறவே தடுக்கப்பட்டுவிட்டது. 

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. 
(அல்குர்ஆன் 2:228) 
நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. 
(அல்குர்ஆன் 4:19) 
அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள். 
(அல்குர்ஆன் 4:21) 
கண்ணிப்பெண்ணாக இருந்தாலும் விதவையாக இருந்தாலும் அவளின் சம்மதம் பெறப்பட வேண்டும் என்பது நபிமொழி, 
நூல் : முஸ்லிம் (2545) 

திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், பெண்களின் சம்மதம் அவசியம் என்றும் மேற்கண்ட வசனங்களும் நபிமொழியும் அறிவிக்கின்றன. 

ஒரு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதில் பங்கெடுப்பவர்கள் அது பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். சாதக பாதகங்களை உணர்ந்து ஒப்புக் கொள்ள வேண்டும். அப்போது தான் அது ஒப்பந்தமாகக் கருதப்படும். ஐந்து வயதுச் சிறுவன் தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்தால் எவ்விடத்திலும் அது செல்லாது. உலகில் எந்தச் சட்டத்தின் படியும் அது செல்லாது. திருமண வாழ்வு என்பது சொத்தை விட முக்கியமானது. திருமணம் என்றால் என்ன?, அதன் கடமைகள் என்ன?, அதன் விளைவுகள் என்ன? என்பதை அறியாத சிறுமி அது குறித்து எவ்வாறு ஒப்பந்தம் செய்ய முடியும்?. 

எனவே மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் பருவ வயதை அடையாத சிறுமிகளைத் திருமணம் செய்வதும், சிறுவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.இந்தக் கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாம் எனக் கூறுவது தவறாகும்

 
நமது பதில்:

நபியவர்கள் என்னை 6வயதில் மணமுடித்தார்கள்.9 வயதில் என்னுடன் குடும்ப உறவில் ஈடுபட்டார்கள் (அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா;முஸ்லிம்:3544)

மேலுள்ள ஹதீஸ் பருவயதிற்கு முன்னர் சிறிய வயதிலேயே ஒப்பந்தம் செய்யலாம் என்பதையும் உறவுக்குத் தகுதியான வயதையடைந்தவுடன் (பருவம் அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை) குடும்ப வாழ்வில் ஈடுபடலாம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.

நபியவர்கள் ஜாஹிலியாக்கால வழமையின் அடிப்படையில் இதனைச் செய்யவில்லை.மார்க்க ரீதியான அனுமதி இருப்பதினாலேயே அவ்வாறு மணமுடித்தார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது:

நபியவர்கள் ஆயிஷாலை மணம் பேசினார்கள் 'நான் உங்களது சகோதரனல்லவா' என்று அபூபக்ர் சொன்னார்கள் அதற்கு நபியவர்கள் :'எனக்கும் உங்களுக்கும் உள்ள சகோதரத்துவம் மார்க்க ரீதியானது அவள் எனக்கு அனுமதிக்கப்பட்டவள்தான் என்றார்கள்(புகாரி:4793)

வஹீயின் அங்கீகாரத்தின்படியே இத்திருமணம் நடந்தது என்பதை பின்வரும் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

ஆயிஷாவே கனவில் நீ மூன்று முறை எனக்கு எடுத்துக் காட்டப்பட்டாய்.ஒரு பட்டாடைத் துணியொன்றால் உன்னை போர்த்தியவன்னம் ஒரு மலக்கு என்னிடத்தில் காண்பிப்பார்.திறையை நீக்கிப்பார்த்தால் உன் முகம் தெரியும்.அப்பொழுதெல்லாம் 'இது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியென்றால் அவன் அதனை நடத்திவைப்பான்' என்று சொல்லிக் கொள்வேன்.என்று நபியவர்கள் என்னிடத்தில் சொன்னார்கள்.(முஸ்லிம்:6436)

இதனால்தான் அல்குர்ஆனும் பருவயதடையாத பெண்கள் தலாக் சொல்லப்பட்டால் அவர்களது இத்தா கால எல்லை பற்றி அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

மாதவிடாய்க் காலத்தைக் கடந்த வயதிலுள்ள பெண்ளதும் இதுவரை மாதவிடாய் வராத பெண்களதும் இத்தாக்கால எல்லை மூன்று மாதங்களாகும் (அல் குர்ஆன் 65:4)

மேற்குறிப்பிடப்பட்ட அம்சங்கள் சிறியவயதில் திருமண ஒப்பந்தத்தையும் உடல் தகுதி (உடல் தகுதி தானே தவிர பருவம் அடைய வேண்டும் என்ற அவசியம் இல்லை) பெறும் வயதில் குடும்ப உறவையும் அனுமதிப்பதையும் காணலாம்.

திருமண பந்தத்தில் இணையவிருப்பது ""சிறிய வயதுடையவர்களாக இருந்தால் அவர்களது பொறுப்பாளிகளே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பார்"" என்ற செய்தி தாரகுத்னியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு உமர் (ரழியல்லாஹு) உள்ளிட்ட ஸஹாபாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறிய வயதில் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

இதுவே ஸஹாபாக்கள், தாபியீன்கள் மற்றும் இமாம்கள் அனைவரின் ஏகோபித்த கருத்துமாகும (இஜ்மஃ). இந்த விஷயத்தில் யாரிடமும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, நவீனவாத சிந்தனைத்தாக்கம் உடைய நவீனவாதிகளைத் தவிர.

மேலும் இளவயது திருமணத்திற்கு எதிரான சிந்தனை போக்கு கி.பி 18ம் நூற்றாண்டு வரை அறவே மக்களிடம் இல்லை. 

மேற்கத்திய சிந்தனைகள் உலகிற்கு பெண்ணுரிமை என்ற பெயரில் பரவிய போது தான் இள வயது திருமணங்களை மக்கள் ஏதோ ஒரு கெட்டக் காரியம் போலவும் மனித உரிமை மீறல் போலவும் கருதலாயினர்.  அதுவரை உலகின் எல்லா சமுதாயங்களிலும் இத்தகைய திருமணங்கள் நீக்கமற நிறைந்திருந்ததை வரலாற்றை உன்னிப்பாக படிப்போர் அறிந்திருக்கலாம்.

 இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதயாத்தாலும் எவ்வித கருத்து வேறுபாடும் இன்றி பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயத்தை இந்த மனிதர் (பீ.ஜே) ஹராம் ஆக்குகிறார். அதற்கு ஆதாரமாக குர்ஆனை  குர்ஆனுடன் மோத விடுகிறார்.

அதாவது ஸஹாபாக்களும் பின் வந்த தாபியீன்களும் அறிஞர்களும் இவர் காட்டும் வசனங்களையும் ஆதாரங்களையும் தவறாக புரிந்து கொண்டது போலவும், 1000 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்தான் சரியாக புரிந்து கொண்டது போலவும் இவரின் கூற்று உள்ளது. உண்மை என்னவென்றால் இத்தகைய திருமணங்கள் எல்லாம் தற்போது உள்ள நவீன சிந்தனைக்கு எதிரானது என்பதால், நடைமுறையில் உள்ள நவீன சிந்தனைகளுக்கு ஆதரவாக பீ ஜே அவர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் அனுகுகிறார் . இவர் தனக்கு வேண்டியது போல் குர்ஆன் வசனங்களை வளைக்கிறார். ஏன்னினில் இவர்களை பொறுத்த வரை அழைப்பு பணி செய்வதற்கு இஸ்லாத்தை நவீன மார்க்கமாக காட்ட வேண்டியதிருக்கிறது.

இந்த ஒரு விஷயமே அறிவுள்ள மக்களுக்கு பீ ஜேயின் வழிகேட்டை விளக்குவதற்கு போதுமானது.

No comments:

Post a Comment